தமிழ்நாடு

போக்சோ சட்டமும் வழக்குகளும்

சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்..

தந்தி டிவி

சிறார்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உருவாக்கப்பட்ட சிறப்பு சட்டம் தான் போக்சோ சட்டம்.

குற்றவியல் ஆவண காப்பக துறையின் தகவலின்படி 2016ஆம் ஆண்டில் மட்டும் 1567 போக்சோ வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 156 வழக்குகள் சென்னை மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் 105 வழக்குகளும், வேலூர் மாவட்டத்தில்

99 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இவற்றில் குறைந்த அளவாக கரூர் மாவட்டத்தில் 13 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2015இல் தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 1544 வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை மகிளா நீதிமன்றத்தில் 77 போக்சோ வழக்குகள்

நிலுவையில் உள்ளன. ஆனால் 180 வழக்குகள் முதல் தகவல் அறிக்கை அளவிலேயே தேங்கியுள்ளன.

செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் 75 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. 53 வழக்குகள் போதுமான ஆவணங்கள் இல்லாததால் காவல் துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

200 வழக்குகள் முதல் தகவல் அறிக்கை அளவிலேயே தேங்கியுள்ளன.

சமீப காலமாக போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிப்பதால், பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு