தமிழ்நாடு

பெரியார் சிலை உடைப்பு விவகாரம் - பா.ம.க முன்னாள் நிர்வாகி கைது

செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் பா.ம.க முன்னாள் நிர்வாகி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் பா.ம.க முன்னாள் நிர்வாகி கைதுசெய்யப்பட்டுள்ளார். சாலவாக்கத்தை அடுத்த கலியப்பேட்டை பகுதியில், இரு நாட்களுக்கு முன்பாக பெரியார் சிலை மர்மநபர்களால், சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக, அதேபகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் மேற்கொண்ட விசாரணையில், பா.ம.க முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமோதரன், பெரியார் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, தாமோதரனை போலீசார் கைதுசெய்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்