தமிழ்நாடு

பெரியார் சிலை உடைப்பு விவகாரம் - பா.ம.க முன்னாள் நிர்வாகி கைது

செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் பா.ம.க முன்னாள் நிர்வாகி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் பா.ம.க முன்னாள் நிர்வாகி கைதுசெய்யப்பட்டுள்ளார். சாலவாக்கத்தை அடுத்த கலியப்பேட்டை பகுதியில், இரு நாட்களுக்கு முன்பாக பெரியார் சிலை மர்மநபர்களால், சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக, அதேபகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் மேற்கொண்ட விசாரணையில், பா.ம.க முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமோதரன், பெரியார் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, தாமோதரனை போலீசார் கைதுசெய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்