தமிழ்நாடு

ப்ளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய விலங்கியல் ஆசிரியர்

புதுச்சேரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விலங்கியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்...

தந்தி டிவி

ப்ளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய விலங்கியல் ஆசிரியர்

புதுச்சேரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விலங்கியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு அதே பள்ளியில் பணியாற்றும் விலங்கியல் ஆசிரியர் சகாய டோனி வளவன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அந்த ஆசிரியர் மாணவிக்கு பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ஆசிரியர் சகாய டோனி வளவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Breaking | TN govt | டிஜிபி நியமன விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு விவாதம்

Breaking | TN Govt | "மேலும் 1 லட்சம்.." - தமிழக அரசு அதிரடி

BREAKING || தமிழகத்தில் கால் வைத்த தேர்தல் அதிகாரிகள்...எலெக்‌ஷன் எப்போ? பரபரக்கும் மீட்டிங்

Breaking | Rafale | Fighter Jet | 114 ரஃபேல்.. வரலாற்றில் இல்லாத டீல்.. இந்தியாவின் மெகா Action

TN Weather Report | வங்கக்கடலில் உண்டான திடீர் மாற்றம்.. தமிழகத்துக்கு முக்கிய செய்தி