தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு : காவல்துறை வேண்டுகோள்

ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வருவோரை பாதுகாக்கும் வகையில் இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* வரும் 15-ம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், வீரர்களின் பாதுகாப்பிற்கும், விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனே உயர்தர முதலுதவியும், சகல வசதிகளுடன் கூடிய ரத்த வங்கியுடன் நடமாடும் மருத்துமனைகளும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

* காளைகளை பிடிக்க தெரிந்த மற்றும் முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும். பார்வையாளர்களை பாதுக்காக்கும் வகையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதுடன்,

* தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் மற்றும் மாட்டின் உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறும், மதுரை மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்