தமிழ்நாடு

மாற்று வேலை வழங்கக் கோரி பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் மாற்று வேலை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் மாற்று வேலை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், தண்ணீர் பாக்கெட், சாப்பாட்டு பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பிளாஸ்டிக் மீதான தடை நாளை அமலுக்கு வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்த வந்த பெண் தொழிலாளர்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்