தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை சட்டத்தை தமிழக அரசு மிக தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் மோடி சேகரித்து அப்புறப்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ் பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்த போது அதை செயல்படுத்துவதில் காட்டப்பட்ட ஆர்வமும் தீவிரமும் காலப்போக்கில் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். குடிநீர் புட்டிகள், எண்ணெய், பால் உறைகள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டில் உள்ள பிற பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்