தமிழ்நாடு

பிளாஸ்டிக் பைகளுக்கு அனுமதி இல்லை - ஏழ்மையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மூதாட்டி

வியாபார பாதிப்பை பொருட்படுத்தாமல் பிளாஸ்டிக் பைகளில் வியாபாரம் செய்வதில்லை என மூதாட்டி ஒருவர் உறுதியாக இருந்து வருகிறார்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் பெரமனூர் பகுதியில் பணியாரக் கடை வைத்துள்ள சரோஜா என்ற மூதாட்டி, தன்னுடைய கடையில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அதன்படி, கடை முன்பாக அறிவிப்பு பலகை ஒன்றை வைத்து அதில், பிளாஸ்டிக் பைகளுக்கு அனுமதி இல்லை, பாத்திரம் கொண்டு வரவும் என அவர் எழுதி வைத்துள்ளார். அதன்படி பாத்திரங்கள் கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்குகிறார் சரோஜா, ஏழ்மை நிலையிலும் வியாபார பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் சுற்றுச்சூழலை காக்க துடிக்கும் மூதாட்டி சரோஜாவை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்