தமிழ்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக மழைப்பொழிவு பதிவான இடங்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக மழைப்பொழிவு பதிவான இடங்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்

தந்தி டிவி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக மழைப்பொழிவு பதிவான இடங்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம். 7ம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை பெரம்பூரில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தலா 13 சென்டி மீட்டர் மழையும்,சென்னை தண்டையார்பேட்டையில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது,அம்பத்தூர், பூந்தமல்லி, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தாம்பரம், கோவை தெற்கு, புதுச்சேரி, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், ஊத்துக்கோட்டை, சென்னை டிஜிபி அலுவலகம், செங்கம் பகுதிகளில் தலா 8 சென்டி மீட்டர் மழை,சென்னை எம்ஜிஆர் நகர், ஸ்ரீபெரும்புதூர், பொன்னேரி, திருக்கோவிலூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு