தமிழ்நாடு

பன்றிகளை திருடியதால் ஆத்திரம்? : பன்றி கடை உரிமையாளர் படுகொலை

பல்லாவரம் அருகே பன்றிகளை திருடியதாக கூறி பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தவர் அடித்துகொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள ஆதம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். திருநீர்மலை நாகல் கேணி சாலையில் பன்றி இறைச்சி கடை நடத்தி வரும் இவரை நள்ளிரவில் ம‌ர்ம கும்பல் ஒன்று வீட்டின் அருகிலேயே இரும்பு கம்பியால் அடித்து கொன்றது. இந்த திடீர் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த சங்கர்நகர் போலீசார், சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அக்கம்பக்கத்தினரிடையே விசாரித்த‌தில், சீனிவாசன், பன்றி உரிமையாளர்களுக்கு தெரியாமல், பன்றிகளை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்த‌தாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோத‌த்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, திருநீர்மலை, நாகல்கேணி பகுதிகளில் பன்றி வளர்ப்பவர்களிடம் போலீசார் தங்களது விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்