சிறுவாபுரி முருகன் கோயிலில் செல்போன் தடை தற்காலிக நீக்கம் தமிழ்நாட்டில் கோயில்களுக்குள் செல்போன் தடை அமல்படுத்தப்பட்ட ஒரு வாரத்திலேயே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் எவ்வித தடையுமின்றி செல்போன்களைக் கொண்டு செல்கின்றனர்.
இதற்கிடையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நேர்த்திக்கடன் செலுத்திவரும் நிலையில், காத்திருப்பு மண்டபத்தில் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
#siruvapuri #murugan #phoneban #temples #minister #ramesh #thanthitv