தமிழ்நாடு

தொடர்ந்து 15 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 15 நாட்களாக விலை உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

* கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மார்ச் மாதத்தில் இருந்து மாற்றம் இல்லாமல் இருந்தது

* ஆனால் கடந்த இரண்டு வாரமாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதுடன், இன்றும் 15 வது நாட்களாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

* இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 58 காசுகளாகவும், டீசல் 51 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 4 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 58 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

* உலகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் தேவை குறைந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைக் கண்டது.

* தற்போது, பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.

* இந்த நிலையில், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.

* இந்திய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளதாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை