வளர்ப்பு நாய் கடித்து மாணவி காயம் - தட்டிகேட்ட தாய்க்கு கொலை மிரட்டல் மதுரையில் LABRADOR நாய் கடித்து 12 வயது மாணவி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்சாரதி என்பவரது நாய் கடித்ததை மாணவியின் தாய் நேசலெட்சுமி தட்டிகேட்டபோது, நாயின் உரிமையாளரான விஜய் சாரதி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதில் மாணவியின் தாயாருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.தொடர்ந்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் கீழ் கரிமேடு காவல்துறையினர் இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.