தமிழ்நாடு

கேபிள் ஆபரேட்டர்கள் பணியாற்ற அனுமதி - கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவு

ஊரடங்கு காலத்தில் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு காலத்தில் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கேபிள் டி.வி. ஒளிபரப்பில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தடையின்றி சேவை வழங்குவதற்காக கேபிள் ஆபரேட்டர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்கள் துறை சார்ந்த பணியை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் வீட்டிலிருந்தே பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்படும் தொலைதொடர்பு சிக்கல்களை தீர்க்கும் வகையில் தகவல் தொடர்பு ஊழியர்களும் ஊரடங்கு காலத்தில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி