தமிழ்நாடு

காவிரி ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் தேவை - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

காவிரி ஆணையத்திற்கு நிரந்த தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தந்தி டிவி

மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், காவிரி ஆணையத்தின் இடைக்கால தலைவராக செயல்பட்டு வருகிறார். நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் நியமனம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மசூத் உசேன், மத்திய நீர் ஆணைய தலைவராக இருப்பதால், காவிரி ஆணையம் சுதந்திரமான அமைப்பாக செயல்படுவதில் இடையூறாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த மனு, அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசூத் உசேன், இரு அமைப்பின் தலைவராக செயல்படுவதால் பல்வேறு குழப்பம் நிலவுவதாக தந்தி தொலைகாட்சி முன்கூட்டியே சொன்னது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்