தமிழ்நாடு

பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் - வேலூர் சிறையில் இருந்த சொந்த ஊர் செல்லும் பேரறிவாளன்

பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

தந்தி டிவி
பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனை செல்ல ஏதுவாக வேலூர் மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன், சிறுநீரக சிகிச்சை பெற்றுவந்தார். இதனிடையே, பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம் அம்மாள் மனு செய்தார். மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், 30 நாட்கள் பரோல் வழங்கிய நிலையில், தற்போது, புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வேலூர் சிறையில் இருந்து, அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை