தமிழ்நாடு

நிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை : தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது.

தந்தி டிவி
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது. அணையின் முழு கொள்ளளவான 53 அடியை எட்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால், 5 ஆயிரத்து 780 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், ராதாபுரம்- வள்ளியூர் பகுதி மக்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?