தமிழ்நாடு

கடலூர் : ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்கும் விநோத போராட்டம்

கடலூர் அருகே கிராம நிர்வாக அதிகாரியை மாற்றக் கோரி, ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்கும் விநோத போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நடுவீரப்பட்டு கிராம மக்கள், கோரிக்கை மனுவுடன், 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர். நடுவீரப்பட்டு கிராம நிர்வாக அலுவலர், சாதி, இருப்பிடம், வருமானம், பட்டா மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாகவும், தர மறுத்தால் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி