தமிழ்நாடு

பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை பணி நிறைவு

அதி வேக சோதனை ஓட்டம் நடத்திய அதிகாரிகள்

தந்தி டிவி
பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்ததையொட்டி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. காரைக்குடி திருவாரூர் இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிவடைந்து, கடந்த சில நாட்களாக, ட்ராலி மூலமாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி ஆகியோர் தலைமையில் அதி வேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை 75 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகல ரயில் பாதையில் ஆய்வு ரயில் மூலமாக அதி வேக சோதனை ஓட்டம் நடைபெற்றது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"