தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை...

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
அரியலூர் மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள டால்மியாபுரத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு முதுகுவலி ஏற்பட்டதால், உறவினர்கள் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை அவருக்கு உணவு கொடுக்க வந்த உறவினர், வார்டில் அவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மருத்துவமனையில் தேடிய போது கழிவறையில் கோவிந்தசாமி தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை சம்பவம் குறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"