தமிழ்நாடு

சிலைகடத்தல் வழக்கில் கைதானவரின் மனைவி தற்கொலை முயற்சி

சிலை கடத்தல் வழக்கில் கைதான தலைமை எழுத்தர் ராஜா-வின் மனைவி பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தந்தி டிவி

சிலைகடத்தல் வழக்கில் கைதானவரின் மனைவி தற்கொலை முயற்சி

தஞ்சை மாவட்டம், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிலைகள் காணாமல் போனதாக வழக்கு தொடரப்பட்டு முன்னாள் செயல் அலுவலர், தலைமை எழுத்தர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே வழக்கு நடந்து வரும் நிலையில், தலைமை எழுத்தராக பணியாற்றிய ராஜா-வின் வீட்டை முன் அறிவிப்பின்றி சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். உடனே வீட்டை காலி செய்ய சொன்னால் எங்கு போவது என்று ராஜா அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவரது மனைவி அபினேஸ்வரி, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைதொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாங்கள் குடும்பத்துடன் சாக வேண்டிய நிலை வந்தால் அதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் தன் காரணம் என்று ராஜா வேதனையுடன் கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்