#kilambakkambusstand | #holiday | திக்குமுக்காடும் கிளாம்பாக்கம் - போக்குவரத்துத்துறை செயலாளரை சுற்றி வளைத்த பயணிகள் போக்குவரத்துத் துறை செயலாளரை முற்றுகையிட்டு, பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கும்பகோணம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். காலை 9 மணிக்கே பேருந்தில் அமர்ந்திருந்தும், நீண்ட நேரமாக பேருந்து இயக்கப்படவில்லை என்றும், பேருந்து புறப்படும் நேரம் மற்றும் உரிய அறிவிப்புகளை அதிகாரிகள் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதனால் ஆய்வுக்கு வந்த போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேருந்துகள் இயக்கப்படும் நேரம் மற்றும் வழித்தடங்கள் குறித்த அறிவிப்புகளை பேருந்து நிலையத்தில் முறையாக வெளியிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்தார்