தமிழ்நாடு

வடமதுரை நகரையே "பசியில்லா வடமதுரை" ஆக்க முயற்சித்துவரும் இளைஞர்கள்...

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பசியில்லா வட மதுரை என்ற அமைப்பின் மூலம் சேவை செய்து வருகிறார்கள்...

தந்தி டிவி

அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, தினமும் உணவு மற்றும் தண்ணீர் கேன்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் இந்த இளைஞர்கள், ஆதரவற்ற அனைவருக்கும் கொடுத்து வருகின்றனர். மன நலம் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக குளிக்காமல், சாலையில் திரிந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு, முடிவெட்டி, குளிப்பாட்டி, நல்ல உடை, காலணி , போர்வை என கொடுத்து வாஞ்சையோடு பராமரித்து வருகின்றனர்.

மனிதநேயமுள்ள இந்த இளைஞர்களின் சேவைக்கு ஆதரவு தரும் அவர்களின் குடும்பத்தினர், நிதி உதவியும் செய்கிறார்கள். கேட்பாரற்று கிடப்பவர்களுடன் செல்பி எடுத்து, இணையதளங்களில் பதிவிட்டு பிரபலம் அடைய முயற்சிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், வடமதுரை நகரையே பசியில்லா வடமதுரை ஆக்க முயற்சித்துவரும் இந்த இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்...

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு