Actor Parthiban | Sanitation Worker Padma | தூய்மை பணியாளர் பத்மாவின் பாதம் தொட்டு.. நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி செயல் சென்னை தி.நகரில், சாலையில் கிடந்த 45 சவரன் நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பாதை பூஜை செய்துள்ளார். திருவல்லிக்கேணியை சேர்ந்த பத்மா தனது நேர்மையான செயலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரிடமிருந்து பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தூய்மைப் பணியாளர் பத்மாவின் பாதம் தொட்டு வணங்கி, பாத பூஜை செய்து, "உலக அழகி" என்று கிரீடம் சூட்டியதாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.