தமிழ்நாடு

பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா... ஆசை மகனுக்கு வேட்டி அணியும் விழா - ஆச்சரியப்படுத்திய பெற்றோர்

தந்தி டிவி

தமிழகத்தில் வயதுக்கு வந்த பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவது போல், ஆந்திராவில் 15 வயதுடைய ஆண் பிள்ளைகளுக்கு வேட்டி அணியும் விழா நடத்துவது வழக்கம். விழா அன்று தாய் மாமன் பழம், பாக்கு சீர் வரிசை தட்டுடன் பட்டுவேட்டி எடுத்து கொடுப்பார். அந்த வேட்டியை இளைஞர் அணிந்து கொண்டு, நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களின் காலில் விழுந்து வணங்குவார். இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில், மாமல்லபுரத்தில் வசித்து வரும், ஆந்திர தம்பதி வெங்கடேஷ் - ஹரிப்பிரியா தங்கள் மகன் வெங்கட வினய்க்கு வேட்டி அணியும் விழா நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக, பத்திரிகை அடித்து, ஊர் ஊராக சென்று தங்கள் உறவினர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த பத்திரிகை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்