எக்ஸ் மினிஸ்டர் மனைவி செய்த காரியம் பரமக்குடியில் பரபரப்பு இளம்பெண்ணை தாக்கிய முன்னாள் அமைச்சர் மனைவி
பரமக்குடியில் நகை திருடியதாக இளம்பெண்ணை முன்னாள் அமைச்சரின் மனைவி மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் சுந்தரராஜனின் மனைவி சரோஜினி, தனது கிளினிக்கில் பணிபுரிந்த இளம் பெண்ணை நகை திருடியதாக குற்றம் சாட்டியதோடு, திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்க சென்ற பெண்ணின் உறவினர்களையும் முன்னாள் அமைச்சரின் மனைவி கடுமையான கோபத்தில் மிரட்டியுள்ளார்..