Para Athlete | Sivagami | தடைகளைத் தகர்த்தெறிந்த தமிழக வீராங்கனை - சிவகாமியின் நெகிழ்ச்சி பயணம் தடைகளை மீறி சாதனை - பாரா தடகள பயிற்றுநர் சிவகாமி அரியலூர் மாவட்ட பாரா தடகள வருகை பயிற்றுநராக சிவகாமி என்பவரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் நெல் கிராமத்தை சேர்ந்த சிவகாமி என்பவர் பார்வை குறைபாடு உடையவராக பிறந்துள்ளார். இருப்பினும் தடகள விளையாட்டில் தீராத ஆர்வம் கொண்ட இவர், தனது வறுமை நிலையை குறித்து தலைமை செயலகத்தில் மனு அளித்திருந்தார். இதனையடுத்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பணிநியமன ஆணையை வழங்கி சிவகாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.