தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தந்தி டிவி

தீர்த்தவாரி வைபவம் :

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கும்பகோணத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. கும்பகோணத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான நாகேஸ்வரர் கோவில், ஆதி கம்பட்ட விஸ்வநாதர் கோயில் சுவாமிகள் அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் மகாமகக் குளத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை :

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவிற்கு திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் தலைமை தாங்கினார். முன்னதாக கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. 11 நாட்கள் நாள்தோறும் விதவிதமான திருவிழாக்கள் நடைபெற்று, அதனை தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை