தமிழ்நாடு

"கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்ற வாய்ப்பு" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்றி, அங்கேயே கல்லூரி அமைக்க வாய்ப்பு உள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்றி, அங்கேயே கல்லூரி அமைக்க வாய்ப்பு உள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தொல்லியல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில், 5 நாள் பயிலரங்கம் நடைபெற்றது. 200 க்கும் மேற்பட்ட தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இந்த பயிலரங்கத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், பயிலரங்கில் கலந்துகொண்ட தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருங்காலத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்றி அவ்விடத்திலேயே ஒரு கல்லூரியை அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"