தமிழ்நாடு

ஊர் மக்களுடன் தர்ணாவில் குதித்த பஞ்சாயத்து தலைவர்.. திருப்பத்தூரில் சலசலப்பு

தந்தி டிவி

காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டதால் அதிகாரிகளை கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருப்பத்தூர் மாவட்டம் குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி கால்வாய்களை ஆக்கிரமித்ததாக புகார் எழுந்த நிலையில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முனுசாமி , வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் குமாரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனிப்பட்ட பிரச்சனையை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏ அதிகாரிகளை வைத்து மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஊராட்சி தலைவர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே