தமிழ்நாடு

ஊர் மக்களுடன் தர்ணாவில் குதித்த பஞ்சாயத்து தலைவர்.. திருப்பத்தூரில் சலசலப்பு

தந்தி டிவி

காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டதால் அதிகாரிகளை கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருப்பத்தூர் மாவட்டம் குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி கால்வாய்களை ஆக்கிரமித்ததாக புகார் எழுந்த நிலையில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முனுசாமி , வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் குமாரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனிப்பட்ட பிரச்சனையை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏ அதிகாரிகளை வைத்து மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஊராட்சி தலைவர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை