தமிழ்நாடு

Palladam | TN Police | 2 நாட்கள்.. ரியல் எஸ்டேட் நபருக்கு.. நடந்த ரூம் கொடூரம் - பல்லடத்தில் பகீர்

2 நாட்கள்.. ரியல் எஸ்டேட் நபருக்கு.. நடந்த ரூம் கொடூரம் - பல்லடத்தில் பகீர்

thanthitv

Palladam | TN Police | 2 நாட்கள்.. ரியல் எஸ்டேட் நபருக்கு.. நடந்த ரூம் கொடூரம் - பல்லடத்தில் பகீர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கொடுத்த கடனுக்கு வட்டி கேட்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரை அறையில் அடைத்து வைத்து தாக்கிய சம்பவத்தில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கணபதிபாளையத்தை சேர்ந்த உதயகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், பல்லடத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதில் ஒரு கோடி ரூபாயை திரும்ப கொடுத்த உதயகுமார், மீதமுள்ள 10 லட்சத்தையும், வட்டித் தொகையையும் பாக்கி வைத்துள்ளார். இந்நிலையில், ரியல் எஸ்டேட் இடம் பார்க்க செல்லலாம் என, உதயகுமாரையும் அவரது நண்பரையும் அழைத்து சென்ற சதீஷ்குமார், தொண்டாமுத்தூரில் அறையில் அடைத்து வைத்து 2 நாட்களாக தாக்கியதாக கூறப்படுகிறது. போலீஸ் உதவி எண்ணுக்கு அழைத்து, இதுகுறித்து உதயகுமார் தகவல் கூறியதை அடுத்து விரைந்து சென்ற போலீசார், உதயகுமாரையும் அவரது நண்பரையும் மீட்டனர். மேலும், சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை