தமிழ்நாடு

பல்லடம் வங்கி கொள்ளை வழக்கு - டெல்லி விமானநிலையத்தில் ஒருவர் கைது

பல்லடம் வங்கி கொள்ளை தொடர்பாக டெல்லியில் கைதான நபரை திருப்பூர் அழைத்து தர தனிப்படை போலீசார் தலைநகருக்கு விரைந்துள்ளனர்.

தந்தி டிவி

வே.கள்ளிப்பாளையத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில், கடந்த 21ஆம் தேதி 18 லட்சம் பணம், 500 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கொள்ளை தொடர்பாக, டெல்லி விமானநிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலத்தில் எஸ்பிஐ வங்கியில் கொள்ளை அடித்தது தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது, கைதான நபர் பல்லடம் வங்கியையும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து டெல்லி போலீஸ், திருப்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து, அந்த நபரை திருப்பூர் அழைத்து வர, இரண்டு தனிப்படை போலீஸ் டெல்லி விரைந்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்