Palani Thaipoosam | தைப்பூசத் திருவிழா நிறைவு நாள் - தெப்பத்தேர் நிகழ்ச்சியில் களைகட்டிய பழனி பழனியில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளை ஒட்டி, தெப்பத்தேர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் முடிந்து வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி தெப்பத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியிறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது.