தமிழ்நாடு

"பழனி கோவில் நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளது" - உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை விளக்கம்

பழனி தண்டாயுதபாணி கோவிலில் உள்ள நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

பழனி தண்டாயுதபாணி கோவிலில் உள்ள நவபாஷாண சிலை, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. மருத்துவ குணம் கொண்ட இந்த சிலை சேதம் அடைவதை தடுக்க பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை செய்ததில், முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்ததாகவும், சில தனிப்பட்ட நபர்களின் விருப்பத்திற்காக, நவபாஷண சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பழனியை சேர்ந்த சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சிலையை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கவும் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, பழனி மூலவர் சிலையான நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளதாகவும், அதை மாற்றுவதற்கான திட்டம் ஏதுமில்லை என்றும் இந்து சமய அறநிலைய துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்