பங்குனி உத்திர திருவிழா - பழனியில் குவியும் பக்தர்கள் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இது தொடர்பான காட்சிகளை காண்போம்.... பழனி மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். மேலும், இன்று மாலை 4 மணிக்கு பழனியில் தேரோட்டம் நடைபெற உள்ளது.