தமிழ்நாடு

பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை : கணக்கில் வராத 56 கிலோ தங்கம், ரூ 2.2 கோடி பறிமுதல்

பழனி பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 56 கிலோ தங்கம் மற்றும் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

வரிஏய்ப்பு புகார் தொடர்பாக பழனி மலை அடிவாரத்தில் உள்ள பிரபல பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை கடை உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 30 ந்தேதி தொடங்கி 3 நாட்கள், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் . அப்போது கணக்கில் வராத 56 கிலோ தங்கம் மற்றும் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்கள் இருவரும் 93 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்