பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ரோப் காரின் முக்கியப் பாகங்களைச் சீரமைக்கும் வருடாந்திரப் பணிகள் தொடங்கவுள்ளன. இதன் காரணமாக, நாளை மறுதினம் முதல் செப்டம்பர் 14 வரை ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாற்று வழிகளான மின் இழுவை ரயில், யானைப்பாதை மற்றும் பிரதான படிப்பாதையைப் பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.