ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே சிவன் கோவிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி வழிபாடு நடத்தினர். ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள ஒசட்டி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில், ஜனவரி மாதம் தோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தேர் திருவிழாவில், சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, படுகர் இன மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தபடி நடனம் ஆடியது பார்வையாளர்களை கவர்ந்தது.