கண்முன்னே கருகிய நெல் பயிர்கள்.. டிராக்டர் விட்டு அழித்த விவசாயிகள்
#farmer #paddy #damage #water #thanthitv #thiruvannamalai
காய்ந்து கருகிய நெல் பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெய்யார் கிராமத்தில், நெல் பயிர்கள் திடீரென காய்ந்து கருகியதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பல ஏக்கர் பயிர்கள் சேதமடைந்த நிலையில், மாடுகளை மேய்த்தும் டிராக்டர் மூலம் பயிர்களை அழித்த விவசாயிகள் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.