தமிழ்நாடு

அமைச்சர் ஒ.எஸ்.மணியனை மறித்து இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஓ. எஸ். மணியனுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஓ. எஸ். மணியனுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திறந்த வேனில் ஒ.எஸ். மணியன் வாக்கு சேகரித்தார். நீடூர் பகுதியில் வாக்கு சேகரித்த போது, அங்கு வந்த இஸ்லாமியர்கள், மருத்துவக் கல்லூரி அமைக்க அமைச்சர் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டினார். தங்கள் சார்பில் 20 ஏக்கர் நிலம் வழங்கியும், நடவடிக்கை எடுக்க வில்லை என்ற அவர்கள், மசூதி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையை மாவட்டமாக உருவாக்கவும் அமைச்சர் எதிராக உள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்