சுதந்திர தின விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக குவிந்த சுற்றுலாப் பயணிகள், பல்வேறு வண்ண மலர்களை ரசித்தும், புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். குளிர்ச்சியான காலநிலையுடன் பூங்காவின் இயற்கை அழகையும் சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்.