ஊட்டியில் ஒரு மணி நேரத்திற்கு கனமழை: விவசாயிகள் - வனத்துறையினர் மகிழ்ச்சி
ஊட்டி, தொட்டபெட்டா, அவிலாஞ்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
தந்தி டிவி
திடீர் மழையால், தேயிலை மற்றும் காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கோடை நெருங்கும் நிலையில், மழை பெய்துள்ளதால், காட்டுத் தீ ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளதாகவும், வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.