தமிழ்நாடு

மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஊட்டி, மைசூர் மலைப் பாதையில் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.

தந்தி டிவி

ஊட்டி, மைசூர் மலைப் பாதையில் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. ஊட்டி, மைசூர் மலைப்பாதையில் முதுமலை புலிகள் சரணாலயம் மற்றும் பண்டிப்பூர் புலிகள் சரணாலயம் உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக வறட்சி நிலவியதால், அங்கிருந்து இடம் பெயர்ந்த வன விலங்குகள், தற்போது மழை பெய்து வருவதால், சரணாலயங்களுக்கு திரும்பி வருகின்றன. அவ்வாறு திரும்பும் யானைகள், ஊட்டி - மைசூர் மலைப் பாதையில் சுற்றி வருகின்றன.இந்நிலையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வேண்டும் எனவும் வனவிலங்குகளை இடையூறு செய்யும் வகையில், அவற்றின் அருகே சென்று புகைப்படங்கள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக