நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக ரயில் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனையடுத்து சீரமைப்பு பணியில் கடந்த 14 நாட்களாக ரயில்வே துறையினர் ஈடுபட்டு வந்தனர். தற்போது மீண்டும் ரயில் சேவை துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்