உதகை வனப்பகுதியில் சாலையின் இருபுறமும் தீ தடுப்புக்கோடு அமைக்கும் பணி நீலகிரி மாவட்டம் உதகையில் வனப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி மற்றும் இலையுதிர் காலம் காரணமாக, வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகளை (Fire line ) அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்லடி மலைப்பாதை, தெப்பக்காடு மற்றும் ஊட்டி - மைசூர் சாலையின் இருபுறமும் காய்ந்த சருகுகள் அகற்றப்பட்டு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பொக்காபுரம் கோவில் திருவிழா வரும் 20ம் நடைபெற உள்ள நிலையில், வனப்பகுதி வழியாக நடந்து வரும் பக்தர்கள் வனப்பகுதியில் தீ மூட்டி உணவு சமைக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.