தமிழ்நாடு

பாகனுடன் கொஞ்சி விளையாடி சேட்டைகளால் கவரும் குட்டி யானை அம்மு

ஊட்டி முதுமலையில் பாகனிடம் குழந்தை போல் விளையாடி சேட்டைகள் செய்யும் குட்டி யானை அனைவரையும் கவர்ந்துள்ளது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 25 கும்கி யானைகளும், 2 குட்டி யானைகளும் உள்ளன. இதில் தாய் இல்லாத அம்மு என்ற குட்டி யானையை பொம்மன், பெல்லியம்மா ஆகியோர் பராமரித்து வருகின்றனர். இந்த யானை இவர்களிடம் குழந்தை போல பழகி வருகிறது. ஓடி விளையாடுவது, மண்ணில் உருண்டு அடம் பிடிப்பது என இந்த யானை செய்யும் சேட்டை பார்ப்போரையும் குதூகலத்தில் ஆழ்த்துக்கிறது. இந்த யானையை கட்டுப்படுத்த குறைந்தது 4 பேராவது தேவைப்படுகின்றனர். இரவு நேரத்தில் பாகன் பொம்மன் இல்லாமல் யானை உறங்குவது கூட கிடையாது என்றும் கூறுகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்