தமிழ்நாடு

"50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூல்" - நீதிமன்றத்தில் தகவல்

"50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூல்" - நீதிமன்றத்தில் தகவல்

தந்தி டிவி

"50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூல்" - நீதிமன்றத்தில் தகவல்

சென்னை மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையை சரி செய்தும், 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்று, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டும் வசூலிக்க உத்தரவிட்டது.தொடர்ந்து இந்த உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வழக்கறிஞர், சாலை சீரமைப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும்,இருப்பினும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருவதாகவும் கூறியதோடு,வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்த மாத இறுதியில், வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவித்தது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்