தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரி வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் முறையீடு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை கோரும் வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு ஏற்றது.

தந்தி டிவி

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில், பணத்தை இழந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்கால தலைமுறையினர், எளிதாக சூதாட்ட வலையில் விழுந்து விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை செய்யக் கோரி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தார். இதை கேட்டறிந்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். மேலும், அந்த மனுவை நாளை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"