தமிழ்நாடு

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலம் முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல் அமல் - ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, வரும் ஏப்ரல் 1 ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு கார்டு தாரர், நாட்டில் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றும் பொருட்களை பெறலாம். தமிழகத்தில், இத்திட்டம், சோதனை முயற்சியாக நெல்லை மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டன.இந்நிலையில்,

உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் காமராஜ், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 30 லட்சம் ரேஷன் கார்டுகள் இருப்பதாகவும், இந்த திட்டத்தின் கீழ், 9 ஆயிரம் கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இதில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படவில்லை என்பதால் வரும் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை