தமிழ்நாடு

யதேச்சையாக சோதனை போட்ட போலீஸ்.. ஆம்னிக்குள் அள்ள அள்ள கிடைத்த அதிர்ச்சி

தந்தி டிவி

ஆரணி அருகே ஆம்னி காரில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

களம்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை திண்பண்டங்களுக்கு இடையே மறைத்து கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, காரை ஓட்டிவந்த சிவக்குமார், சுரேஷ்பாபு இருவரை கைது செய்து, குடோனில் பதுக்கிவைத்து விற்பனை செய்துவந்த வடமாநில வியாபாரி பரத்குமாரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி கார் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Trichy Hospital Issue | நோயாளியை எலி கடித்த விவகாரம் - தூய்மை பணி ஒப்பந்ததாரருக்கு பறந்த உத்தரவு

BREAKING || சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

Pralhad Joshi | மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார் பிரகலாத் ஜோஷி

Minister Nirmal Kumar | மேகதாது முதல் ராமதாஸ் வரை.. மொத்தத்தையும் போட்டுடைத்த அமைச்சர் நிர்மல்குமார்

senthil balaji | "நானே சொல்றேன்.." விசாரணை முடிந்த கையோடு செ.பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்