Thoothukudi | இறங்கி திபுதிபுவென ஓடிய ஆம்னி டிரைவர்கள் - தூத்துகுடியில் பரபரப்பு மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் நடத்திய திடீர் சோதனையில் மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்கள் பிடிபட்டனர். திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வந்துள்ளனர். அவர்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கும் போதே அவர்கள் தப்பியோடினர். இதனையடுத்து ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மாற்று ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கின. இந்த சம்பவத்தால் ஆம்னி பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியும் அவதியும் அடைந்தனர்.